Store
  Store
  Store
  Store

அதிர்ஷ்டம் தரும் துளசிமாலை



    கிருஷ்ணன், இனிமையானவன். அவனது வாழ்க்கை இனிமை. வாக்கு இனிமை. அவன் லீலைகள் எல்லாமே இனிமை. அதே போல, கிருஷ்ணன் சம்மந்தப்பட்ட அனைத்தும் புனிதம் நிறைந்தது. அவன் புல்லாங்குழல் புனிதம்,அவனது வலம்புரி சங்கு புனிதம், அவன் மயிலிறகு புனிதம், அவன் விரும்புகிற துளசியும் புனிதம். ஒரு சின்னக் குழந்தை மிட்டாய் கேட்பது போல, கிருஷ்ணன் குழந்தையாகி நம்மிடம் கேட்கிறான். எனக்கு துளசி கொடு. அது இல்லாவிட்டால், அது வளர்ந்த மண்ணையாவது கொடு என்று.

கண்ணனை விரும்புவர்கள் நாம். கண்ணனே விரும்பியது துளசியை. துளசியின் இலை, தண்டு, காம்பு, வேர் மற்றும் அது முளைக்கும் மண் அனைத்துமே கிருஷ்ணனின் வாசம் வீசும். புனித பொருட்கள் தண்ணீரில் விழுந்து, நன்றாக ஊறிய துளசி தண்ணீரை தெய்வீக தீர்த்தமாக மாற்றும். அந்த தீர்த்தம் பிறந்த குழந்தைக்கு வரவேற்பு கூறும் வாழ்த்து முடித்து பிறப்பதற்கு முன்னால், இருந்த ஊருக்கு செல்பவனுக்கு வாழ்த்தும் கூறும். துளசியின் மகாத்மியம் கொஞ்ச நஞ்சமல்ல. மகாலஷ்மி, மாதவனின் மார்பில் இருக்கிறான். மாதவனோ துளசியில் இருக்கிறார். எனவே துளசி அருளை மட்டுமல்ல. பொருளையும் வாரித்தரும் பொக்கிஷமாக இருக்கிறது.

துளசியை பார்த்தால் புண்ணியம். தொட்டால் மகிழ்ச்சி. அணிந்தால் ஆனந்தம். நினைத்தால் பரவசம். ஜெபமாலையாகக் கொண்டு ஜெபித்தால் வெற்றியின் நாயகி வந்து முடிசூடுவாள். இத்தகைய துளசி எங்கு இருந்தாலும், புனிதம் நிறைந்தது. ஆயினும் கிருஷ்ணன் அவதரித்து திருப்பாதங்கள் மண்ணில் பட நடமாடிய துவாரகா, மதுரா போன்ற பகுதியில் விளைகின்ற துளசி நேரடியாகவே கிருஷ்ணனின் பாதத்திலிருந்து உற்பத்தியாகும் கங்கையின் புனிதத்தன்மையை பெற்று விடுகிறது.

மதுரா மற்றும் துவாரகையில் தயாராகும் துளசிமாலை நமது குரு மிஷன் அறக்கட்டளையில் இருக்கிறது. கிருஷ்ணனின் பாதத்தில் வைத்து, நமது குருஜி அவர்கள் விஷேசமாக தியானித்து உருவாக்கிய ஸ்ரீ கிருஷ்ணனின் அருளமுதம் இந்த துளசி மாலையில் இருக்கிறது. இது உங்களிடமிருந்தால், வெற்றியைத் தேடி தரும். உங்கள் வீடுகளில் பூஜை அறைகளில் இருந்தால், மகாலஷ்மியை வரவழைக்கும். இல்லங்கள் தோறும் இல்லாமை என்பது இல்லாது போய் பொன்னும், மணியும் பூத்து குலுங்கட்டும். ஆரோக்கியமும், அன்பும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவர் இருதயத்திலும்,உடம்பிலும் ஆட்சி செய்யும்.

  • நேரடியாக ஆசிரமத்தில் துளசிமாலை பெறுவதற்கு ஒருமாலை  - 300/- ரூபாய்
  • இந்தியாவில் தபால் மூலம் துளசிமாலை பெறுவதற்கு ஒருமாலை - 400/- ரூபாய்
  • வெளிநாட்டில் தபால் மூலம் துளசிமாலை பெறுவதற்கு ஒருமாலை  - 500/- ரூபாய்

Online மூலம் வாங்க கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்


Thulasi Malai

     நேரடியாக துளசிமாலை வாங்குவதற்கு கீழே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்